சேலத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா
- on 12.30.12
- Latest Salem News, தமிழ்
- No Comments
- Digg
- Del.icio.us
டிசம்பர் 3-ம் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி 29-12-2012 அன்று சேலம் செளடேஸ்வரி கல்லூரியில் சுபம் சேரிடபுள் டிரஸ்ட், சேலம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சேலம் சென்ட்ரல் இன்னர்வீல் சங்கம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளை நடத்தியது.
நாம் அங்கே சென்றபொழுது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் கரம்கூப்பி வரவேற்றதுஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கால் ஊனமான மாற்றுத்திறனாளிகள் வீல் சேரில் அமர்ந்தபடி விளையாட்டு போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டிருந்தனர். கண்பார்வை இழந்தவர்கள் ஒருவருக்கொருவர் தொட்டு அளவளாவிக்கொண்டிருந்தனர். ட்ரஸ்ட் உறுப்பினர்கள் இவர்களை ஒழுங்குபடுத்திக்கொண்டுருந்தனர்.ட்ரஸ்ட் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது வித்யாசமின்றி கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனி பிரிவாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டவர்களை மற்ற மாற்றுத்திறனாளிகள் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விசயம் எனவென்றால், அவர்கள் முகத்தில் தவழ்ந்த புன்னகை. சுயமாக தொழில் செய்பவர்கள், ஊனத்தை காரணம்காட்டி சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளியாய் பிறந்ததால் மனவேதனைக்கு ஆளானவர்கள், அரசின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள், எதிர்காலம் என்னவென்றே தெரியாத மனவளர்ச்சி குன்றியவர்கள் என அவர்களின் புன்னகைய ரசித்துபார்த்துக்கொண்டிருந்த அவர்களின் பெற்றோர்களின் கண்களில் ஈரம் கசிந்ததை நம்மால் உணரமுடிந்தது.
போட்டிகளில் வென்றவர்கள், தோற்றவர்களை ஆசுவாசப்படுத்தினர், தோற்றவர்கள் வென்றவர்களை பாராட்டினர். அவர்கள் வெற்றி தோல்வியை முக்கியமாக கருதாமல், விளையாட்டுபோட்டிகளில் கலந்துகொண்டதையே வெற்றிபெற்றதாய் எண்ணி கர்வதுடன் அங்கு வலம்வந்ததை காணமுடிந்த்தது.
மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியோடு அன்றய பொழுதை கழித்தாலும், நாளை?
இதை எண்ணிப்பார்க்கும்போதுதான்,
“அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அதனினும் அரிது கூன், குருடு, அரிது நீங்கி பிறத்தல் அரிது”
எனும் ஒவையின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை நம்மால் உணரமுடியும். எனவே அடுத்த பிறவி என்பது உண்மை என்றால், மீண்டும் இவர்கள் இந்த மாற்றுத்திறனாளிகளின் உலகில் பிறக்கக்கூடாது என இறைவனை வேண்டுவோமாக….
![]()


























